வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சட்டவிதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்..!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சட்டவிதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த நபர் தூத்துக்குடியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சட்டவிதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யாருடைய அழைப்பின் பேரில், எந்தெந்த இடங்களுக்கு சென்றார் என விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.