காவல்துறையினர் கடமையை செய்யும்போது அவர்களை அச்சுறுத்தினால் நீதிமன்றம் மென்மையாக இருக்காது…! நீதிபதி எச்சரிக்கை…!

Published by
லீனா
  • கொரோனா காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமான ஒன்று.
  • காவல்துறையினர் கடமையை செய்யும்போது அவர்களை அச்சுறுத்தினால் நீதிமன்றம் மென்மையாக இருக்காது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் அவசர தேவைகளுக்காக வெளியில் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கொரோனா வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணம் செய்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை நிறுத்தி முக கவசத்தை அணியுமாறு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது காவல்துறையினருக்கும், அதில் பயணம் செய்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டுள்ளனர். இதனை அடுத்து, இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக திருச்சியை சேர்ந்த காஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது இந்த கொரோனா காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள் நீண்ட நேரம் பணிகளை செய்து வருவதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக வாகனங்களில் செல்லும் போது காவல்துறையினர் நிறுத்தி கேள்வி கேட்டால் அதற்கு எங்கே செல்கிறோம்? எதற்காக செல்கின்றோம்? என்ற ஆவணங்களை காண்பிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்வது, தகராறு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த விஷயங்களில் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்குவதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் மன்னிப்பு கேட்குமாறும், 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காஜாவை கைது செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

10 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

12 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

12 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

14 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

15 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

16 hours ago