மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு முன்னர் வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார்.கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு என்ற வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து இருந்தார்.மேலும் தடையை மீறி மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஸ்டாலின் அவர்கள் கொரோனா பரவல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களுக்குப் பயந்து கிராம சபைக்குத் தடை விதித்தார்கள். கிராமங்களில் ‘மக்கள் சபை’யாகத் திரண்டது மக்கள் திரள்! #DMKwithFarmers என திரண்ட எங்கள் மீது வழக்காம். மண் காக்கும் போரில் வழக்குகள் தூசு; மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…