Minister Mano Thangaraj [File Image]
தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது.
இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
372 காலிப்பணியிடங்கள்.. அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அவர் மேலும் கூறுகையில், சென்னையில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக புகார் வந்த போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு சில இடங்களில் அந்த நபருக்கு ஆவின் விற்பனை உரிமம் வழங்காமல் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளோம். எங்களிடம் (ஆவின்) நேரடியாக மொத்த வியாபாரிகள் வாங்கி அதனை மக்கள் பெறுகையில் இம்மாதிரியான குற்றசாட்டுகள் வரவில்லை.
மாறாக, மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கி அவர்கள் மூலம் பொதுமக்கள் வாங்கும் போது தான் இம்மாதிரியான பிரச்சனைகள் எழுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஆவின் பாலை அதிக விலைக்கு ஏன் விற்கிறீர்கள் என கேள்வி கேட்க வேண்டும்.
கொரோனா காலத்தில் கால்நடை பராமரிப்பு சரிவர இல்லாமல் இருந்தது. அது குறித்து தற்போது ஆய்வு நடத்தி வருகிறோம் முந்தைய கால நிர்வாக குளறுபடிகளை சரி செய்து வருகிறோம். தற்போது விளைநிலங்கள் என்பது குறைந்துவிட்டது. இதனால் கால்நடை தீவனம் போன்றவை குறைந்து கொண்டே வருகிறது. முன்னர் ஆவினில் இருந்து பால் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…