டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த போது,தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து,கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்றும்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும்,மேலும்,முல்லை – பெரியார் அணை பிரச்சனை போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார்.
இதற்கிடையில்,தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோர்,டெல்லியில் முகாமிட்டு, பிரதமர்,மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் போன்றவர்களை சந்தித்து வருகின்றனர்.இவர்களும் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் எல்.முருகன் அவர்களும்,அமைச்சர் துரைமுருகன் அவர்களும் எதிர்பாராதவிதமாக சந்தித்து கொண்டனர்.அப்போது, எல்.முருகன் “அய்யா வணக்கம் நல்லா இருக்கீங்களா?” என நலம் விசாரித்தார். அப்போது,செய்தியாளர் ஒருவர் “உங்கள் நண்பர்கள் வருகிறார்கள்” என்று கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,”தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான், “,என்று தெரிவித்தார்.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…