சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, மருத்துவமனையில் இருந்து 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஒரு வாரம் ஓய்வுக்காக அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் ஒன்றாக சந்திக்க சென்றதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் கூறப்பட்டது. ஆனால், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3ம் தேதி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிமுக கழக செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் – ஈபிஎஸ் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சசிகலாவை சந்திக்க சென்றதற்காக கர்நாடகா அதிமுக மாநில செயலாளர் பதிவில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து கூறுவது தவறு. சில அமைச்சர்கள் வழிதவறி செல்கின்றனர் என்றும் சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…