சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் – கருணாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே,  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை ஒரு வழியாக பாஜக, அதிமுகவில் இணைத்துவிட்டால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.

சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், அதிமுகவில் யார் தலைமை என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஒரு வேளை இந்த நால்வர் கூட்டணி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வரும் சட்டசபை தேர்தல் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் பெரும் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

33 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

2 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

3 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

3 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago