ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள பட்டிபுலம் கிராமத்தில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது இந்தியா முழுவதும் உள்ள 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வருகைத் தந்தனர். இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து வரும்பொழுது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வெளிவந்த செய்திகளை கவனித்த ஆளுநர் தமிழிசை, நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால், நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது என்று கூறியுள்ளார். நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும் எதற்கு, ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று தமிழிசை சௌந்திரராஜன் மேலும் கூறியுள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…