நினைவு சின்னத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் எதற்கு என கருத்துகேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா சின்னம் நிறுவதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடலுக்குள் பேனா சிலை வைத்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்றும் மெரினா கடலில் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் எனவும் கூறினார். நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், கடலுக்குள் வைக்க கூடாது. அண்ணா அறிவாலயத்தில் வேண்டுமானால் பேனா நினைவு சின்னத்தை வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்த சீமான், அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை, பேனா நினைவு சின்னம் அமைக்க நிதி இருக்கா? எனவும் கேள்வி எழுப்பினார்.
எனவே, பேனா நினைவு சின்னம் வைத்தால் கடுமையான போராட்டம் செய்வோம். இதுகுறித்து மாற்றுக்கருத்து கூறினால் கூச்சல் போடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். மேலும், மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் சீமான். பேனா சிலை அமைக்க ஒருதரப்பு எதிர்ப்பும், மற்றொரு தரப்பு ஆதரவும் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…