திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எந்த பிரச்னையும் இல்லாமல் முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது. திமுக ஆட்சியில் பெண்கள் சாலையில் கூட நடக்க முடியாது. இதெல்லாம் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக என்றாலே அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் இதனை எல்லாம் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
10 ஆண்டு காலம் ஆட்சிக்கு வர முடியாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் சுருட்டி கொண்டு சென்றுவிடுவார்கள். இதனால் மக்கள் யோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஒரு விவசாயி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் கொள்கை, சமூக நீதி என்றால் என்னவென்று தெரியுமா? என்றும் உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…