அரசு அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையும் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் முறையாக அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலைகள் வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது என  விருதுநகரில் இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி சிலை வைப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் போலீசார் சிரமத்துக்குள்ளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை என்றும் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்படகாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

30 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

43 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago