#Breaking:சென்னை:மழை,வெள்ள பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

Published by
Edison

சென்னையில் மழை,வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள வீடுகள் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது.கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் ஈவிஆர் சாலை, சுங்குரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. மேட்லி சுரங்க பாதை, கணேஷபுரம் சுரங்க பாதை உள்ளிட்ட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,சென்னை கொளத்தூரில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.பின்னர்,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்,’மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார்.

இதனையடுத்து,சென்னையில் அடையாறு, திருவான்மியூர், பட்டினம்பாக்கம், மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் கண்கானிக்கவும் ,மேற்வார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தவும் 15 மண்டலங்களுக்கு 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதன்படி,கமல் கிஷோர், கணேசன், சந்தீப் நந்தூரி, டி.ஜி.வினய் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.சென்னை மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நடக்க உள்ள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Recent Posts

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

53 minutes ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

2 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

2 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

3 hours ago

LSG vs GT: குஜராத்தை சமாளிக்குமா லக்னோ அணி.? டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் விவரம்.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

3 hours ago

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…

4 hours ago