மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என ரோஜா பேட்டி.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சர் ரோஜா அவர்கள் இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சாமி தரிசனத்திற்கு பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆந்திராவில் தன்னை சுற்றுலா விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக நியமித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாமியார் வீடான தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நான் அமைச்சராக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இதனால் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து தரிசனம் செய்வது வழக்கம். தனக்காக யார் யார் வேண்டிக்கொண்டார்களோ, அவர்களுக்கெல்லாம் மறுபடியும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…