ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

Published by
பாலா கலியமூர்த்தி

என் மீதான ஊழல் புகார்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகத் தயாராக உள்ளேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, ஆதாரம் இருந்தால் வெளியிட சொல்லுங்கள், என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் பொது வாழக்கையில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்றும் சட்டமன்ற தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

எனது துறையில் எந்த இடத்திலும் நான் முறைகேடு ஊழல் செய்ததில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். பொதுவாழ்க்கையில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் ஒரு முன்உதாரணமாக இருப்பதாக கருதுகிறேன். நான் பந்தா, பவுசு எல்லாம் செய்தது கிடையாது. ரெட் லைட் காரில் செல்லும் போது நான் ஒரு அமைச்சர், மற்ற வகையில் நானும் மக்களோடு மக்கள், தொண்டர்களுடன் தொண்டராகத்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

3 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

3 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

4 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

5 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

5 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

7 hours ago