நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்…!வைகோ உறுதி

Default Image

20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

அதன் பின்னர்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,  3 கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற வழக்கில் சிறையிலிருந்த மூவரை விடுவித்துள்ளார்கள் சிறையிலிருக்கும் .பேரறிவாளன் உட்பட 7பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும்.ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே, கூட்டணிக்கான விளக்கமும் கூட.நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன் .20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்