இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.. இது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

ஒற்றை தலைமை விவகாரம் ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி ஆலோசனை நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம், வைத்திலிங்கம், வளர்மதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் தீர்மானக்குழு பங்கேற்றது.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுயக்குழு தீர்மானம் குறித்து 3-ம் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த தவறும் இல்லை. ஒற்றை தலைமை குறித்து பேசியதில் என்ன தவறு?, அதை தான் இப்போதும் கூறுவேன். தொண்டர்களின் மனநிலையின் பிரதிபலிப்புதான் மாவட்ட செய்யலாளர்களின் வேலை, அதுதான் ஒற்றை தலைமை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.

ஒற்றை தலைமை குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் இடையே ஆலோசிக்கப்பட்டது. ஒற்றை தலைமையா அல்லது இரட்டை தலைமையா என்பதை கட்சி தான் முடிவு செய்யும். பொதுவெளியில் பேசி உடைப்பதற்கு ஒற்றை தலைமை விவகாரம் ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. நான் ஊடகங்களில் சொன்னது என்ன சிதம்பர ரகசியமா? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என ஒற்றை தலைமை குறித்து ஊடகத்தில் பேட்டியளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஓபிஎஸ் மறைமுகமாக கூறிய நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. அதிமுகவில் அமைப்பு ரீதியாக மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களுக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

16 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

29 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

40 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

47 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago