போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில், அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணியின் சூரமங்கள ஒன்றிய செயலாளருமான செல்லப்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வசூல் செய்த பணத்தை திரும்பி தருமாறும், இல்லையென்றால் சங்கை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து,இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின்பேரில், செல்லப்பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…