தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் -தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Default Image

தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் என்று  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகத்தில் எல்லாம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் .
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பிளாஸ்டிக் இல்லாத தெலுங்கானா ராஜ்பவனை படைத்திருக்கிறோம்.
தெலுங்கானா ராஜ்பவனில் தினமும் காலை 5.30 மணிக்கு நிர்வாக அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் யோகாவை கடைபிடிக்கிறோம். மகிழ்ச்சியான சூழல் ஆரோக்கியமான சுற்றுச் சூழல் ஆயுத பூஜை அன்று தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்