விரைவில் மக்கள் பணி ஆற்ற மீண்டு வருவேன் – அமைச்சர் சாமிநாதன்

Default Image

தங்கள் அன்பினால் நான் நலமாக இருக்கிறேன். மக்கள் பணியாற்ற விரைவில் மீண்டு வருவேன் என அமைச்சர் சாமிநாதன் ட்வீட்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால், மேலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்ச சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவாமிநாதன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். தங்கள் அன்பினால் நான் நலமாக இருக்கிறேன். மக்கள் பணியாற்ற விரைவில் மீண்டு வருவேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்