தெலுங்கானா ஆளுநராக 3 ஆண்டுகள் நிறைவு.! புத்தக கண்காட்சியில் பங்கேற்ற தமிழிசை.!

Default Image

தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார்.

இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது.

அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் , ‘ நான் தெலுங்கானா ஆளுநராக இருப்பதால், சில சமயம் தமிழகத்திற்கு வந்து ஏதேனும் கருத்து கூறிவிட்டால், உடனே சில பத்திரிகைகளில் வேறு மாதிரி எழுதி விடுகிறார்கள். நீங்க ஏன் மேடம் இங்க வந்து கருத்து சொல்கிறீர்கள் என கேட்கிறார்கள்.’ என குற்றம் சாட்டினார்.

அடுத்ததாக, ‘ தமிழகத்தில் என் மூக்கை நுழைகிறீர்கள் என கேட்கிறார்கள். நான் தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன். வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். தெலுங்கானா ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை சுட்டிக்காட்டுவேன். யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது’ என பேசினார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்