பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் – முதல்வர்

Published by
பாலா கலியமூர்த்தி

நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ணனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றம்.

நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். தூத்துக்குடி துறைமுக சாலை விரிவாக்கம், சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கீழ்பவானி பாசன பகுதி சீரமைத்தல் – புனரமைத்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

மேலும், 8 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

6 minutes ago

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…

1 hour ago

ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில்  உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…

2 hours ago

CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

3 hours ago

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

15 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

16 hours ago