பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் – முதல்வர்

நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ணனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றம்.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். தூத்துக்குடி துறைமுக சாலை விரிவாக்கம், சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கீழ்பவானி பாசன பகுதி சீரமைத்தல் – புனரமைத்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
மேலும், 8 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025