மேயர் என்பதை பதவியாக நினைக்காமல் பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மேயர் நிர்வாகப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்த முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களால் முதன் முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மேயர் என்பதை பதவியாக நினைக்காமல் பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமுடன் எடுத்து வைக்க வேண்டும். விதிமீறல் இல்லாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் நிலையான, சீரான, நீடித்த வளர்ச்சியே அரசின் நோக்கம். மேயர்கள் மாநகராட்சி கூட்டத்தை கால முறைப்படி கூட்ட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண காணவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…