கள்ளக்குறிச்சி விவகாரம்: ‘அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்’..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Published by
அகில் R

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை தற்போது  ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலருக்கும் நேற்று இரவு முதல் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களை அப்போது கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, இன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கொண்டே இருந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்தார்கள் என தவறான தகவலை பரப்புகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறி இருந்தார்.

அதன் பின் உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கியது, இதனால் சற்று முன்பு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மேலும், தற்போது கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்கொண்டு 40-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து ‘இந்த வழக்கு விசாரணையையும் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் அவரது க்ஸ் தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவர், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

24 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

55 minutes ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

1 hour ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago