வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Default Image

கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் என பழனிவேல் தியாகராஜன் பேட்டி. 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள்.

ஆம் நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர்; இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். கடந்த முறை நான் பங்கேற்காத அதே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை இம்முறை எனது முயற்சியில் மதுரையில் இக்கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்துள்ளேன்; யார் யாருக்கு என்ன திறமையுள்ளது என அறிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக வில் சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. நான் பெரிய மனிதன் எனக்காக ஜால்ரா தட்டு என சொல்லமாட்டேன்; பெரிய மனிதனாக இருக்க முடியவில்லையென்றாலும் குட்டி மனிதர்களாக இருக்காதீர்கள்! எனக்காக போஸ்டர் அடி, வேலை செய் என சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்