நாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் எனக்கு சீசர் தான் வேணும்!!

Default Image

கோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு வருடங்களாக ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தார் அதற்கு சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது குளிப்பாட்டி விடுவது என ரொம்ப செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவரது காலடிச் சத்தத்தைக் கேட்டு கவிதா பின்னாடியே வாலை ஆட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளே வந்துவிடும், இதைக்கண்ட இவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.இதனால் சீசரை வீட்டைவிட்டு வெளியே எங்கேயாவது விட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதை கேட்ட கவிதா வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பெற்றோர் கேட்காமல் விட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள், மன உளைச்சலுக்கு ஆளான கவிதா அவரது அறைக்குச் சென்று கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதனால் கவிதாவை காணாமல் சீசர் உணவு உட்கொள்ளாமல் சோகத்தில் இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்