“ஸ்டாலினோடு மோதியவன் நான்” முன்னாள் அமைச்சர் அதிரடி ..!!

Published by
Dinasuvadu desk

“ஸ்டாலினோடு நேருக்கு நேர் மோதியவன் நான்” -முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிரடி

தஞ்சாவூர் ,

தஞ்சாவூரில் நடந்த  அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், `ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் என பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். ஊழலை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை’ என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் அண்ணாவின்  110 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் , “ராஜபக்‌ஷே சொல்கிறார் இலங்கையில் நடந்த போருக்கு உதவி செய்தது இந்திய அரசுதான் என்று. இந்திய அரசு என்றால் அப்போது கூட்டணியோடு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான். தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது வேஷமிடுகிறார்கள் திமுகவினர்.

ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் ஊழல் என பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். அதனால் சொல்கிறேன் மொழி, தமிழ் இனம், குடும்ப அரசியல் இப்படி எதை பற்றியும் பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. எல்லோரும் நினைக்கிறார்கள் எப்படியாவது அதிமுகவை கைபற்றி விடலாம் என்று. ஆனால் அது முடியாது. தினகரன், ஸ்டாலின், ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவை கைபற்ற முடியாது. ஜெயலலிதா சொன்னது போல் நூறு ஆண்டு காலம் இந்த கட்சி எழுச்சியோடு இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

DINASUVADU 
 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago