சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று சென்னை பரங்கிமலை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களுடைய வருத்தத்தையும் , ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
இதுக்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…