பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது என தெரிவித்தார். அதன்பிறகு டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி குறித்து பேசிய அவர், டெல்லி தேர்தலை பற்றி பார்க்கும் போது கடந்த தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது என கூறினார். இதையடுத்து நடிகர் விஜயை பற்றியும் நெய்வேலியில் நடந்த பாஜக போராட்டம் பற்றியும் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது வழக்கமான நடைமுறைதான்,எங்களுக்கும் விஜய்க்கும், எந்த பகையும் இல்லை என குறிப்பிட்டார். மேலும், நெய்வேலி சுரங்க ஆலைக்கு யார் சென்றாலும், கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபோன்ற இடத்தில சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய மந்திரியைக் கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது எனவும், மற்றபடி விஜய் படங்களை நானே ரசித்து பார்த்திருக்கிறேன் என்றும், தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன் என தெரிவித்தார். பின்னர் அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…