ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா? தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பகையும் கிடையாது – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சவால் விடுத்துள்ளார். 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று பூந்தமல்லி நசரத்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முக ஸ்டாலின், திமுக சூரசம்காரம் செய்துவிடும் என்று முதல்வர் பழனிச்சாமி பயப்படுகிறார். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் செய்யப்போகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்ல பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் வாழ்கைகைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல்தான் வரும் சட்டமன்ற தேர்தல் என்று மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

அவர்களை விமர்சிப்பது தனிப்பட்ட முறையில் அல்ல, முதல்வர், துணை முதல்வர்கள் மீது தனிப்பட்ட முறைகள் எனக்கு விரோதம், எந்த பகையும் கிடையாது. அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தவறானது, ஆட்சி சுயநலமானது. அதனால் எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன். அவர்களை அகற்றிவிட்டு, தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சியை அமைக்க உங்கள் முன்னாள் உறுதி ஏற்றுள்ளேன். வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்கள் கவலைகளை தீர்ப்பதில் நான் முதல்வனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய பட்டம் எனக்கு தேவையா? இந்த சமுதாயத்திற்காக உழைத்தவன் நான், என்னுடைய உழைப்பின் மூலமாக இனம், நாடு, மக்கள், இளைஞர்கள், பெண்கள் அனைத்து சமூக மக்களும் பயனைடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதி மொழியை அளிக்கிறேன் என்று பேசியுள்ளார். மேலும், திமுக நடவடிக்கையை துவங்கியதுனாலயே ஆரணி எழிலரசி என்பவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கியது அரசு. அதிமுக ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா என சவால் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago