Sudhakar, Additional commissioner of transport [File Image]
சென்னையில் இன்று நம்ம ஹெல்மெட் எனும் பெயரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், ஹெல்மெண்ட் அணியாமல் தான் தற்போது அதிக விபத்து ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த தான் நம்ம ஹெல்மெட் என்னு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாம் எப்படி சட்டை போடுகிறோமோ, அது போல தான் ஹெல்மெட் போடுவதும். நிறைய பேர் தற்போது ஹெல்மெட் போட ஆரம்பித்து விட்டனர். இது நம்ம உயிர், நம்ம ஹெல்மெட். எங்கள் கனவு சென்னையில் விபத்து விகிதம் குறைவு என்பது தான்.
இன்னைக்கு ஹெல்மெட் அணிவது எல்லாரும் கடைபிடித்து வருகிறார்கள். பல இரு சக்கர விபத்துக்களை பார்க்கிறோம், அவர்கள் எல்லாம் கூறுவது ஹெல்மெட் போட்டு இருக்கலாம், ஹெல்மெட் பிளாக் மாட்டி இருக்கலாம் என கூறுவது தான். ஏன், எங்க அப்பாவை இழந்தது கூட விபத்தில் தான். அப்போது தான் எனக்கும் ஹெல்மெட் முக்கியத்துவம் புரிந்தது என சென்னை கூடுதல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உருக்கமாக பேசினார்.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…