அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் – ஓபிஎஸ்

Default Image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் ட்வீட். 

நேற்று அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஜூன் 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த கூட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலோனோர் அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

நேற்று ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தநிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி அவர்களது இல்லத்தில் தனித்தனியாக அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஓபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்