ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, முதல்வர் நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்; நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான்.
இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்..?தன்னை பெரிய பொருளாதார அறிஞர் கூறிக்கொள்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர். மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும். தேவையில்லாத விசபரிட்சையை செய்ய வேண்டாம்.
திமுக தேனிலவு காலகட்டத்தில் உள்ளது. கடந்த 4 மாதத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம், இதை மக்களிடம் எடுத்து செல்வோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது. இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை என தெரிவித்தார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…