#BREAKING: 74 நாள்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம்..!

Published by
murugan

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக  ஆஜராகி பதில் அளித்தார். கடந்த 2 நாட்களாக 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்,2 நாள்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின் சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். ஆறுமுகசாமி ஆணையத்திடம் உண்மையான பதிலை அளித்துள்ளேன். நேற்றும் இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் உரிய பதிலை உண்மையான பதிலை தெரிவித்துள்ளேன். நேற்றும் இன்றும் காலை, மாலை என 4 முறை விசாரணையில் பங்கேற்று சாட்சியம் அளித்து உள்ளேன். ஏழு முறை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இரண்டு முறை சொந்த காரணத்தினாலும், பட்ஜெட்டாலும் வர முடியவில்லை. இரண்டு முறை மட்டுமே சம்மன் பெற்றும் ஆஜராகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 74 நாள்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. முரண்பட்ட பதில்களை எதையும் நான் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. சசிகலா மீதான குற்றசாட்டுகளை நீக்கவே விசாரணை நடத்த கோரினேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.

தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சசிகலா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என தெரிவித்தார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago