பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்…!ஆனா தேர்தல் வரும் போது நான் யார்னு தெரியும் …!மு.க.அழகிரி சவால்

Default Image

பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Image result for mk stalin mk .alagiri
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேர்தல் வரும் வரை காத்திருப்போம்.தேர்தல் வரும்போது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம். கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை கற்றுக் கொண்டேன் .பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்