எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட தொடர் மோதலை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி கட்சியில் இருக்கும் தலைவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்கும் போக்கு அதிமுகவினர் மத்தியில் தொடர் எதிர்ப்புகளை பெற்று வந்தது.

இதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயார் எனவும் பொதுச்செயலாளர் எடப்பாடி பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

கூட்டணி முறிந்து விட்டதால் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க கூடாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து பாஜகவும் எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம்.

பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அதிமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது. மேற்கொண்டு எதையும் பேச விரும்பவில்லை. கூட்டணி முறிவுக்கு பின்னர் பாஜக குறித்து அதிமுகவும், அதிமுக குறித்து பாஜகவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் நிர்வாகிகள் மவுனம் காத்து வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,  தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயரா? என கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது கட்சி தலைமை, பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் எனவும் பதிலளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

19 minutes ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

55 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

2 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

3 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago