டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே மாணிக்கராஜா தான் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என கூறி, சிங்கப்பூர் இதுவரை சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
மாணிக்கராஜா கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்று சவால் விடுத்துள்ளார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது.
இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார். ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்றும் தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…