இந்த இரு நாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது – கடம்பூர் ராஜூ

Default Image

டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.

எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே மாணிக்கராஜா தான் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என கூறி, சிங்கப்பூர் இதுவரை சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

மாணிக்கராஜா கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்று சவால் விடுத்துள்ளார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது.

இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார். ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்றும் தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu