கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக அளவில் அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.
கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும். எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விட பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி கொரோனா தொடர் சங்கிலியை துண்டித்து விட முடியாது.
கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…