கோவை வருகையின்போது எனக்கு வரவேற்பு பதாகைகள் வேண்டாம் -ஸ்டாலின் ..!

Default Image

கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் என  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக அளவில் அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும். எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விட பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி கொரோனா தொடர் சங்கிலியை துண்டித்து விட முடியாது.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்