எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ஆளுநரின் சனாதன தர்மம் தொடர்பான கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது குறித்து பதிலளித்த நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசைன் தயாரானதும் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2% என்ற அளவில் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…