அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை- மதுரைக்கிளை..!

Default Image

மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் உயிரிழந்தால் 50 லட்சம், செவிலியர்கள் உயிரிழந்தால் 10 லட்சம், காவலர் உயிரிழந்தால் 25 லட்சம் நிவாரணம் கோரி மதுரையை சார்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து பரிசீலனை செய்ய ஐகோர்ட் பரிந்துரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்