எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை -வைகோ..!

Published by
murugan

எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே உள்ள கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். அப்போது உங்களுடைய மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா..? என கேள்வி எழுப்பியபோது,  எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன். 28 வருடங்கள் லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் காரில் பயணம் செய்துள்ளேன். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் ஐந்து வருடங்கள் சிறை என வாழ்க்கையை நான் அழித்து கொண்டேன்.

எனது மகனும் கஷ்டப்பட வேண்டாம், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என கூறினார். கட்சியில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரும் 20ஆம் தேதி தெரியும். 20-ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் அப்போது பெரும்பான்மை என்ன முடிவு என்ன என்பது தெரியவரும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

24 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

1 hour ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

2 hours ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago