நான் வடிவேலு கிடையாது., என்னை சாதாரணமாக நினைக்காதீங்க – கருணாஸ் ஆவேசம்

Published by
பாலா கலியமூர்த்தி

நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, நேற்று நெல்லையில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 12 அம்ச கோரிக்கைகளில், மொழி மற்றும் தமிழ் இனம் சார்ந்த பிரதான 3 கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள், நீங்கள் எந்த சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடுகளை கொடுத்தாலும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த இடஒதுக்கீடு, சாதிகளும் நீங்களோ, நானோ உருவாகவில்லை. இன்றைய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்தவர்கள் பாக்கெட்டில் இருப்பதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கான உரிமையை வழங்குமாறு கேட்கிறோம். சாதாரணமாக ஒரு நடிகரை பார்த்தால் புகைப்படம், கையெழுத்து கேட்க தோன்றும். ஆனால், என்னைப்போல் சிறிய நடிகரை சிறியவர் முதல் பெரியவர் வரை கையெடுத்து வணங்க வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நான் ஜெயலலிதா அம்மையாரை சந்திக்கும்போது, இப்போது இருக்கும் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆகியோர் இருந்தனர். அப்போது அம்மா அவர்கள் நான் என்னப்பா செய்ய வேண்டும் என்று கேட்டார்.

தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மற்ற சமூகத்தினர் போல் என் சமுதாயமும் கல்வி கற்று அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். இதற்கு பதிலளித்த அம்மா, எப்போது இங்கு நீ வந்தாயோ, அப்போவே அது உனக்கு கிடைத்தாக தான் அர்த்தம் என சொன்னார். இதனை இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அம்மா மறைந்ததால், எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை, என்று சட்டமன்றத்தில் சொன்னவன் நான். ஆதலால், எங்கள் சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு கொடுங்கள் என்று முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

மற்ற சமுதாயம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நீங்கள், முக்குலத்தோர் சமுதாயத்தின் 26 ஆண்டு கோரிக்கை இது. அம்மா அறிவித்த ஆணை இது. அதை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல். எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல், வேறு யாரு ஒருவருக்கும் அரசாணை வெளியிட்டால், நிச்சியம் தமிழகத்தில் ஒட்டுமொத்த முக்குலத்தோர் வாழுகின்ற பகுதிகள் புரட்சி வெடிக்கும். நாங்கள் புரட்சிக்கு பயந்தவர்களும் அல்ல, உயிருக்கும் பயந்தவர்களும் அல்ல.

2016ல் என்னிடம் அதை தருகிறேன், இதை தருகிறேன் என்று பேசினார்கள். ஆனால் நான் ஒரே வார்த்தை சொன்னேன், அண்ணா தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் வடிவேலு கிடையாது, நான் கருணாஸ் சாதாரணமாக நினைக்காதீங்க, எனக்கு தேவை பணம் அல்ல, என்னுடைய பிரச்சனைகளை தீர்ப்பது அல்ல, ஒன்றை மட்டும் வேண்டுகோளாக வைக்கிறேன். வெள்ளை சட்டை போட்டவர்களுக்கு தலைவர் அல்ல, அழுக்கு சட்டை போட்டவர்களுக்கு தான் நான் தலைவன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

16 minutes ago
மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

44 minutes ago
இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

17 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

17 hours ago