நான் வடிவேலு கிடையாது., என்னை சாதாரணமாக நினைக்காதீங்க – கருணாஸ் ஆவேசம்

Published by
பாலா கலியமூர்த்தி

நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, நேற்று நெல்லையில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 12 அம்ச கோரிக்கைகளில், மொழி மற்றும் தமிழ் இனம் சார்ந்த பிரதான 3 கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள், நீங்கள் எந்த சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடுகளை கொடுத்தாலும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த இடஒதுக்கீடு, சாதிகளும் நீங்களோ, நானோ உருவாகவில்லை. இன்றைய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்தவர்கள் பாக்கெட்டில் இருப்பதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கான உரிமையை வழங்குமாறு கேட்கிறோம். சாதாரணமாக ஒரு நடிகரை பார்த்தால் புகைப்படம், கையெழுத்து கேட்க தோன்றும். ஆனால், என்னைப்போல் சிறிய நடிகரை சிறியவர் முதல் பெரியவர் வரை கையெடுத்து வணங்க வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நான் ஜெயலலிதா அம்மையாரை சந்திக்கும்போது, இப்போது இருக்கும் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆகியோர் இருந்தனர். அப்போது அம்மா அவர்கள் நான் என்னப்பா செய்ய வேண்டும் என்று கேட்டார்.

தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மற்ற சமூகத்தினர் போல் என் சமுதாயமும் கல்வி கற்று அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். இதற்கு பதிலளித்த அம்மா, எப்போது இங்கு நீ வந்தாயோ, அப்போவே அது உனக்கு கிடைத்தாக தான் அர்த்தம் என சொன்னார். இதனை இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அம்மா மறைந்ததால், எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை, என்று சட்டமன்றத்தில் சொன்னவன் நான். ஆதலால், எங்கள் சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு கொடுங்கள் என்று முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

மற்ற சமுதாயம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நீங்கள், முக்குலத்தோர் சமுதாயத்தின் 26 ஆண்டு கோரிக்கை இது. அம்மா அறிவித்த ஆணை இது. அதை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல். எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல், வேறு யாரு ஒருவருக்கும் அரசாணை வெளியிட்டால், நிச்சியம் தமிழகத்தில் ஒட்டுமொத்த முக்குலத்தோர் வாழுகின்ற பகுதிகள் புரட்சி வெடிக்கும். நாங்கள் புரட்சிக்கு பயந்தவர்களும் அல்ல, உயிருக்கும் பயந்தவர்களும் அல்ல.

2016ல் என்னிடம் அதை தருகிறேன், இதை தருகிறேன் என்று பேசினார்கள். ஆனால் நான் ஒரே வார்த்தை சொன்னேன், அண்ணா தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் வடிவேலு கிடையாது, நான் கருணாஸ் சாதாரணமாக நினைக்காதீங்க, எனக்கு தேவை பணம் அல்ல, என்னுடைய பிரச்சனைகளை தீர்ப்பது அல்ல, ஒன்றை மட்டும் வேண்டுகோளாக வைக்கிறேன். வெள்ளை சட்டை போட்டவர்களுக்கு தலைவர் அல்ல, அழுக்கு சட்டை போட்டவர்களுக்கு தான் நான் தலைவன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago