Annamalai jeyalalitha [Image- IE & ABP]
ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவேயில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அண்ணாமலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு அண்ணாமலை பதில் அளித்து கூறும்போது, எனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நான் எங்கும் ஜெயலலிதா என்ற பெயரை குறிப்பிடவில்லை. ஒரு பெண்ணாக இருந்து தமிழக அரசியலில் அவர் வளர்ந்த விதம் குறித்து நான் பலமுறை பேசியுள்ளேன்.
எனது பேச்சு தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது, தமிழக அரசு ஊழலில் சிக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக ஊழல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதற்கு எனது போராட்டம் தொடரும், அதற்கு தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…