#BREAKING: சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை- ஓ.பன்னீர்செல்வம் ..!

Published by
murugan

நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று காலை 11.40 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி வரை முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணை மீண்டும் 3 மணிக்கு தொடங்கியது.

அப்போது, சிசிடிவி அகற்றம் தொடர்பாக தலைமை செயலாளர், சுகாரத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பெயரிலே சிசிடிவி அகற்றியதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.

கையெழுத்து போட்டிருப்பேன்:

தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. ஜெயலலிதாவிற்கு சிகிக்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சிகிக்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவையை கூட்டச் சொன்னதாகவும், 4 நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாக ராம்மோகன் ராவ் விசாரணை ஆணையத்தில் கூறியதை சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ். இடம் கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago