நான் யாரையும் மிரட்டவில்லை; என்னை தான் 3 கோடி கேட்டு மிரட்டுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

Published by
Rebekal

நடிகை சாந்தினி தனக்கு யார் என்றே தெரியாது எனவும், தன்னிடம் 3 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் நடிகை சாந்தினி தேவா. இவர் முன்னாள் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மணிகண்டனுடன் 5 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றுவதாகவும், தன்னை பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ள அவர், தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கு பதிலளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்கள், நடிகை சாந்தினி என்பவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை எனவும், நான் அரசியல்வாதி ராமநாதபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளேன், எத்தனையோ பேரை இதுவரை சந்தித்துள்ளேன்.

அது போல சாந்தினியும் நான் சந்தித்து இருக்கலாம். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு தற்பொழுது தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளதாகவும், எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இதுபோன்ற புகார் மனு கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பதாக வக்கீல் ஒருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரும் தன்னிடம் பேசியதாகவும், சாந்தியுடன் நான் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்று தங்களிடம் உள்ளதாகவும் அதை வைத்து போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் கூறினார்கள்.

அவ்வாறு புகார் கொடுக்க கூடாது என்றால் மூன்று கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினார்கள். ஆனால், நான் செய்யாத தவறுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டதும், மூன்று கோடி கேட்டவர்கள் படிப்படியாக குறைத்து 50 லட்சம் வரை இறங்கி வந்தனர். ஆனால் நான் அதையும் தர முடியாது எனக் கூறி விட்டேன். தற்பொழுது என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்கள். பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை தவறாக பயன்படுத்துகிறது. நான் இந்த பொய்யான புகாரை சட்டப்படி சந்திப்பேன் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

33 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

46 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago