முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டிய கேஎஸ் அழகிரி.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 3 வரியை குறைத்ததன் மூலம், முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
தமிழக அரசு விரைவில் புதிய கல்வி கொள்கையை அறிவிக்கும் என கூறியதோடு ரூ.32,591 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் செய்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை வளர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களையும், அவரது நோக்கம் நிறைவேற பெரும் துணையாக இருக்கிற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…