திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் என்ற சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் 90 அடிக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் 45 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரஜினி , ஹர்பஜன்சிங் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் குழந்தை சுர்ஜித் மீட்டு வர வேண்டுமென எனக் கூறியுள்ளனர். தமிழகத்தின் பல கோவில்கள் , மசூதிகள் , சர்ச்சுகளில் பொதுமக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.
நடுக்காட்டுபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று யாரும் தீபாவளியை கொண்டாட வில்லை. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில் ” சுர்ஜித் நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.இது மிகவும் வேதனையான நிகழ்வு. சுர்ஜித் மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் ” என கூறினார்
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…