நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி சந்திப்பேன். நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. திமுக அவதூறு வழக்கு போடும் அளவிற்கு நான் தகுதி இல்லாத சாதாரண விவசாயி தான். 610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் இல்லை, என்கிட்ட 2 டப்பா, ஊரில் 2 ஆடு, மாடுகள் தான் இருக்கிறது.
என்னை சாதாரண மனிதாக மதித்து, 500 கோடி முதலில், 100 கோடி 2வது மற்றும் தற்போது 10 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக எம்பி வில்சன் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என அண்ணாமலை கூறினார். எனவே, எல்லாத்தையும் அனுப்புங்கள், மொத்தமாக பார்த்துவிடலாம். ஒருவாரம் டைம் எடுத்து மொத்தமாக அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கியுள்ளேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றசாட்டி உள்ளனர். நான் இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருப்பேன், தெம்பு, திராணி இருந்தால், உண்மையான ஆதாரம் இருக்கு என்றால் முழு போலீஸ் படையை பயன்படுத்தி என்னை கைது செய்து உள்ளே அனுப்ப வேண்டும்.
அப்படி கைது செய்யவில்லை என்றால், திமுக சொல்வதை இனிமேல் தமிழக மக்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றார். என்னை கைது செய்யவில்லை என்றால் என் மீதான குற்றசாட்டு பொய்யாகும் என தெரிவித்த அண்ணாமலை, முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பல கேள்விகள் உள்ளன. அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…